(இ - ள்.) நுணங்குபோது அணங்குதாரீர் - நுண்ணிய மலர்களமைந்த அழகியமாலையையணிந்த அமைச்சர்காள்!, வால்வளை பரவிமேயும் - வெள்ளிய சங்குகளானவை எங்கும் பரந்து மேயப்பெறுகிற, வளர்திரை வளாகம் எல்லாம் - மிகுந்த அலைகள் உண்டாகப் பெறுகிற கடல் சூழ்ந்த உலகத்தை எல்லாம்; கோல்வளைவு உறாமல் காக்கும் - செங்கோலானது வளையாமல் அரசாட்சி செய்கின்ற, கொற்றவன் நெடியனேனும் - அரசனானவன் தன்னளவிலே பெருமையால் உயர்ந்தோனாயினும், மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் - மேலே உண்டாகத்தக்க இழிசெயல்களையும் கொடிய செயல்களையும் தானே தடுத்துக்கொள்ளும் ஆற்றலுடையானாகான் அவற்றைத் தடுத்து நிற்போர், நூல்விளை புலவர் அன்றே - அறநூல் நெறிகளையெல்லாம் அமைக்கின்ற அறிஞர்களல்லரோ ? (எ - று.) அரசன் மிகுந்த பெருமையோடு கூடியவனாக இருந்தாலும் அவன் செய்வதையும் தவிர்வதையும் அறியான். அவனை நல்வழியிற் செலுத்துவோர் அமைச்சர்களே என்று அரசன் அமைச்சர்களைப் புகழ்ந்து கூறுகிறான். |