அமைச்சர்கள் பதிலுரைத்தல்

256. இறையிவை மொழியக் கேட்ே்ட 1யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
யறைகழ லரவத்தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்,
 

     (இ - ள்.) இறையிவை மொழியக் கேட்டே - அரசனானவன் மேற்கூறியவாறு
சொல்லியதைக் கேட்டு; இருந்தவர் - அமைச்சர்கள், இறைஞ்சி ஏத்தி - அரசனைத்
தொழுது போற்றி, அறைகழல் அரவத்தானை - ஒலிக்கின்ற வீரக்கழலைக் கட்டிய போர்
மறவர்களைக்கொண்ட பேரொலி பொருந்திய படையையும், அணிமுடி - அழகிய
முடியையும் உடைய, அரசர் ஏறே - அரசர்கட்குச் சிங்கவேறு போன்றவனே! நிறைபுகழ்
உலகம் காத்து - நிறைந்த புகழையுடைய இவ்வுலகத்தைப் பாதுகாத்து; நின் இறைமை நிலாக
என்று - உன்னுடைய அரசுரிமையானது நீடுழி வாழ்வதாக என்று வாழ்த்துரை கூறி, முறை
முறை மொழியலுற்று - வரன்முறையாகப் பதிலுரைத்தற்கு, முன்னிய முகத்தர் ஆனார் -
முற்பட்ட முகமடையவர்களானார்கள் (எ - று.)

நிலாக - நிலாவுக என்பதன் தொகுத்தல் என்பர், அமைச்சர்கள் அரசனை வாழ்த்திப்
பதிலுரைக்கத் தொடங்கினார்கள் என்க. அரசர்கட்கு அமைச்சர்களும் பெரியோர்களும்
பதிலுரைக்கத் தொடங்கும் போதும் ஒரு செய்தியைக் கூறத் தொடங்கும்போதும்
வாழ்த்துதல் மரபு.

( 17 )