(இ - ள்.) திருமணி திகழும் பூணோய் - அழகிய மணிகள் விளங்கும் அணிகலன்களை யணிந்தவனே! மறம் தலைமயங்கி - தீவினையையே மேற்கொண்டு, வையத்து - இவ்வுலகத்தின்கண், ஒருவரை ஒருவர் வாட்ட - ஒருவரை மற்றொருவர் வருத்துதல் செய்ய இவ்வாற்றால், இறந்து - உயிர்கள் மிகுதியாக, அலையுறாமை நோக்கி - துன்பமுறாதபடி பார்த்து, இன்னுயிர் போலக் காக்கும் - அவற்றை இனிய தன்னுடைய உயிரைப் போலப் பாதுகாக்கும், அறம் தலைநின்ற - அறவழிக் கண்ணே சிறந்து விளங்குகின்ற, வேந்தர் அடிநிழல் அன்றி - அரசர்களுடைய அடி நிழலையல்லாமல், யார்க்கும் - எத்தகையோர்க்கும், சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் - சிறப்பானது மற்றொன்றுமில்லை அதனை நீ உணர்ந்து கொள்வாயாக! (எ-று.) உலகத்துயிர்கள் யாவுக்கும் அரசனுடைய செங்கோலை துணை என்க. “ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே, வேந்தமை வில்லாத நாடு“ என்றார் வள்ளுவனாரும் (குறள் - 740) |