(இ - ள்.) மன்னா - அரசனே! கண்எனப்படுவ மூன்று - உலகத் திற்குக் கண்கள் என்று சொல்லப்பெறுவன மூன்றாம் அவையாவன:- காவலன் - உயிர்களைப் பாதுகாத்தற் றொழில் வல்லவனான அரசன், கல்வி - கல்வியறிவுடைமை, காமர் விண்ணினைச் சுழல ஒடும் வெய்யவன் - அழகிய விசும்பின் கண் சுழன்று ஓடுகிற கதிரோன், என்னும் பேரார் எண்ணினுள் - என்று சொல்லப்பெறுகிற பெருமைபொருந்திய இம்மூன்று மாம், மூன்றுள் - இவற்றுள், தலைக்கண் வைத்தகண் அஃது இல்லையாயின் - முதலாவதாக நிறுத்தப்பட்ட நல்லரசாகிய கண் இல்லையானால், மண்ணினுக்கு - இவ்வுலகத்திற்கு, இருளை நீக்கும் வகை பிறிது இல்லை - துன்பவிருளைப் போக்கும் வழி வேறொன்றும் இல்லை (எ - று.) காவலன் துன்ப விருளையும், கல்வி அறியாமையாகிய அகவிருளையும், வெய்யவன் புறவிருளையும் போக்கி காட்டற்குரிய கண்களாம், எவ்வாற்றானும் துன்ப விருள் தொலைதலே உயிர்கட்குச் சிறப்பாகலின் அவ்விருளை அகற்றும் அரசாகிய கண் தலைக்கண் வைக்கப் பட்டது என்க. |