சூழ்ச்சியின் மாண்பு

274. உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
கருதிய 1கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்
2எரிதவழ்ந் திலங்கும் வேலோய் எண்ணுவ தெண்ண
மென்றான்.
 

     (இ - ள்.) எரிதவழ்ந்து இலங்கும் வேலோய் - ஒளிமிகுந்து விளங்குகின்ற
வேற்படையை யுடையவனே, உரிதினின் - உரிமையாக, ஒருவன்செய்த ஊழ்வினை
உதயஞ்செய்து - ஒருவன் உரிமையிற்செய்த பழவினையானது இம்மையில் தோன்றி,
விரிதலின் - பெருக்கத்தை யடைதலால், அதனது உண்மை விளங்கினாற்போல -
அவ்வூழ்வினையின் மெய்ம்மையானது வெளிப்பட்டாற்போல, வேந்தர் கருதிய கருமச்சூழ்ச்ச
 - அரசர் செய்வதற் கெண்ணிய செயற்குரிய சூழ்ச்சியானது, பயத்தினால் கருதும் வண்ணம்
- காரியத்தின் பயனாலே வெளிப்படும்படி, எண்ணுவது எண்ணம் என்றான் - ஆராய்ந்து
துணிவதே சிறந்த ஆராய்ச்சியாவது என்று கூறினான். (எ - று.)

ஊழுண்மை விளைவின்கண் வெளிப்படுதல் போன்று சிறந்த சூழ்ச்சியின் சிறப்புப் பயனால்
வெளிப்படும். அங்ஙனம் பயன்தருமாறு ஆராய்தலே சிறந்த சூழச்சியாம் என்று சூழ்ச்சியின்
மாண்பு கூறினான்.

( 35 )