(வேறு)
விஞ்சையர் சேடி வண்ணனை

278. மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
1துஞ்சிய லில்லாத் துறக்க மனைத்தே. 

     (இ - ள்.) அஞ்சு இயல்வில்லோய் - அஞ்சுகின்ற இயல்பில்லாத வீரவேந்தனே!.
மஞ்சுஇவர் சென்னி மால்வரை வடமலை - முகில்களானவை தவழ்ந்து செல்லுகிற
முடிகளையுடைய வெள்ளிமலையின் வடபகுதியிலே, விஞ்சையர் வாழும் விழா அணி
நல்உலகு - வித்தியாதரர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிறப்பமைந்த நல்ல உலகம்
ஒன்றுஉள்ளது, அது - அந்த உலகமானது, அமரர்கள் - தேவர்களுடைய, துஞ்சுஇயல்
இல்லாத் துறக்கம் அனைத்து - சாக்காடெய்தும் இயல்பு இல்லாத விண்ணுலகத்தைப்
போன்றது (எ - று.)

பகைவர் அஞ்சுதற்குக் காரணமான இயல்புடைய வில்லையுடையோனே எனினுமாம்.
துஞ்சியல் - சாக்காடுறு மியல்பு; உறங்கு மியல்பு எனினுமாம். முதலில் அமைச்சன்,
ஊரைப்புகழத் தொடங்குகின்றான். நாட்டுவளம் மன்னர்கட்கு இன்றியமையாததாகலின
அதனை முன்னர் உணர்த்துகின்றான் என்க.

( 39 )