(இ - ள்.) மேலும் அந்த வடசேடியானது; எல்லா இருதுவும் - கார், கூதிர், முன்பனி, முன்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவக் காலங்களை யெல்லாம், ஈனும் பொழிலினது - உணடாக்குஞ் சோலை களையுடையது, எல்லாநிதியும் இயன்ற இடத்தினது - சங்கநிதி பதுமநிதி முதலிய எல்லாச் செல்வங்களும் அமைந்த இடத்தையுடையது, இராப்பகல் இரவும்பகலும், எல்லா அமரர் கணமும் - எல்லாத் தேவர்களுடைய கூட்டங்களும், எல்லாப் புலமும் நுகர்தற்கு இனிது - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளாலும் நுகர்தற்குரிய எல்லாப் புலன்களையும் உடைமையான் மிகவும் இனிமையை யுடையது. (எ - று.) இதனால் பொழில் நலத்தையும் பொருள் நலத்தையும் உணர்த்தினான். இருது - பருவம். புலம் - ஐம்புலன்கள். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. |