அந்நாட்டுப் பொழில் முதலியன

282. கானங்க ளாவன கற்பகங் காமுகர்
தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்
நானங்க ளாவன நாவி நறுவிரை
வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ?
 

     (இ - ள்.) அந்நாட்டில்; கற்பகம் - வேண்டுவார் வேண்டுவ கொடுக்கும்
கற்பகமரங்கள், கானங்கள் ஆவன - காடுகளாக விளங்குவன, காமுகர் தானங்கள் ஆவன -
இன்ப வேட்கையையுடையர் இன்பம் நுகர் வதற்குரிய இடங்களாக விளங்குவன,
சந்தனத்தாழ் பொழில் - சந்தன மரங்கள் தாழ்ந்து நெருங்கியுள்ள பொழில்களாம்,
நானங்கள் ஆவன - வாசனைப் பொருள்களாவன, நாவி - கத்தூரியும், நறுவிரை - நல்ல
கலவைச் சாந்துமாம், வானங்கள் ஆம் வகைமற்றும் ஒன்று உண்டோ - இன்பம்
நுகர்தற்குரிய விண்ணிடங்களாமாறு வேறு ஒன்றும் உளதோ? (எ - று.)

இந்திரருலகமும் பலவாதலின், வானங்கள் என்றார். வடசேடி எவ்வாற்றானும்
வானவருரகையே ஒக்கும் என்பதாம். நானம் - மணப் பொருள்.
 

( 43 )