காதல் தூது

294.

காம விலேகையுங் கற்பக மாலையும்
சேம 1மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் 2தெருவிடை தாம்பலர் கண்டாய்.
 

      (இ - ள்.) தாமத் தெருவிடை - அந்நகரத்தின் ஒழுங்கு பட்ட தெருவினிடத்திலே,
தூமக்குழலவர் - அகிற்புகை யூட்டப்பட்ட கூந்தலையுடைய மங்கையர், காம இலேகையும் -
காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தியையும், கற்பகமாலையும் - கற்பகப் பூமாலையும், சேம
மணிநகைச் செப்பினுள் ஏந்துபு - பாதுகாப்பு மிகுந்த மணியினால் செய்யப்பெற்ற
ஒளியையுடைய சிமிழுக்குள் வைத்து ஏந்தி, தூது திரிபவர்தாம் பலர் கண்டாய் - தூதாகப்
போய் வருபவர்கள் பலராவர், உணர்ந்து கொள்வாயாக, (எ - று.)

தூது திரிய நேர்ந்தமை ஊடல் விலக்குதற்கு என்க. இலேகை - எழுத்து, காம இலேகை -
காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தி.

( 56 )