(இ - ள்.) தாமத் தெருவிடை - அந்நகரத்தின் ஒழுங்கு பட்ட தெருவினிடத்திலே, தூமக்குழலவர் - அகிற்புகை யூட்டப்பட்ட கூந்தலையுடைய மங்கையர், காம இலேகையும் - காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தியையும், கற்பகமாலையும் - கற்பகப் பூமாலையும், சேம மணிநகைச் செப்பினுள் ஏந்துபு - பாதுகாப்பு மிகுந்த மணியினால் செய்யப்பெற்ற ஒளியையுடைய சிமிழுக்குள் வைத்து ஏந்தி, தூது திரிபவர்தாம் பலர் கண்டாய் - தூதாகப் போய் வருபவர்கள் பலராவர், உணர்ந்து கொள்வாயாக, (எ - று.) தூது திரிய நேர்ந்தமை ஊடல் விலக்குதற்கு என்க. இலேகை - எழுத்து, காம இலேகை - காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தி. |