அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்

300. படையின தமைதி 2கூழின் பகுதியென் றிவற்றின் 3பன்மாண்
புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
விடையமொன் றின்றி வென்ற விடுசுட ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்.

     (இ - ள்.) வேந்தே - அரசே!, படையினது அமைதி - படையின் பலம். கூழின்
பகுதி - பொருளின் நிலைமை, என்று இவற்றின் பன்மாண் புடையவர் - என்று
கூறப்பெறும் இவற்றினாற் பெருஞ் சிறப்புடையவர், அவனொடு ஒப்பார் மற்று ஒருவர்
இல்லை - அவனுக்கு நிகரானவர் வேறொருவரும் இலர், விடயம் ஒன்று இன்றி வென்ற -
கை கூடப்பெறாத பொருள் ஒன்றுமில்லாமல் எல்லாவற்றையும் வெற்றியாக அடைந்த,
சுடர்விடு ஆழி யாளும் நடையவன் - ஒளியை வெளிப்படுத்தும் உருளைப்படையைத்
தாங்கிய அவ்வச்சுவக்கிரீவன், உவப்பின் - மகிழ்ச்சியையடைந்தால், ஞாலம் பிறர் உழை
நடப்பது என்றான் - உலகமானது மற்றவர்களிடத்திலே அரசாட்சி செய்யப் பெறுதலை
யடையுமென்று கூறினான், (எ - று.)

அவ்வச்சவக்கிரீவனுக்கு மகிழ்சியுண்டாகுமாறு நடப்பவர்களே அரசாட்சி பெறுவர் என்பது
 கருத்து.

( 62 )