(இ - ள்.) ஆணைவேந்தே - அரசாட்சிக் கட்டளையைப் பிறப்பிக்கும் அரசனே! ஈங்குநம் குலம்கொம்பு ஒப்பாள் பிறந்தபின் - இங்கு நம்முடைய குலத்தின் கொழுந்துபோல்வாளாகிய சுயம்பிரபையானவள் பிறந்த பிறகு, இனியன் ஆகி - நமக்கு இன்பத்தைச் செய்பவனாகி, தேங்கமழ் அலங்கல் வேலோன் - மணம் வெளிப்படுகிற மாலையை அணிந்த வேற்படையை யுடைய - அச்சுவக்கிரீவன், திறைகொளல் ஒழிந்து செல்லும் - கப்பங் கொள்வதை விட்டிருக்கிறான், ஆங்கு அவன் திறங்கள் எல்லாம் அறிதியால் - ஆங்குள்ள அவன் செய்திகளை யெல்லாம் நன்கு உணர்ந்து கொள் வாயாக, தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ - யான் கூறியவைகளில் பொய் ஏதேனும் தெரியப்படுத்தியதுண்டோ, திருவடி தெளிக என்றான் - திருவடி களையுடைய பெரியீர்! உணர்ந்தருள்க என்று கூறினான், (எ - று.) சுயம்பிரபை பிறந்த பிறகு அச்சுவக்கிரீவன் கப்பம் வங்கா திருத்தலுக்குக் காரணம், சுயம்பிரபையைத் திருமணஞ் செய்து கொள்ளுதல் வேண்டும் என்னும் குறிப்பினாலேயோம என்று அமைச்சன் சுவலனசடிக்கு உணர்த்துகின்றான் என்க. |