பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்

307. 2சுடர்மணி மருங்கற் பைங்கட் சுளிமுகக் களிநல் யானை
யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்
3தொடர்மணிப் பூணி னாற்குச் சுச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்.
 

     (இ - ள்.) சுடர்மணி மருங்கல் - ஒளிவிடுகின்ற மணிகள் அணிந்த பக்கத்தையும்,
பைங்கண் - பசிய கண்களையும், சுளிமுகம் - சினக்கின்ற முகத்தையும், களி -
களிப்பினையும் உடைய, நல்யானை - நல்ல யானைப் படையை உடையவனும், அடர்மணிக் கதிரும் - நெருங்கிய மணிக் கோவையையும், பைம் பொன்மாலையும் - பசிய
பொன்னரிமாலையும் அணிந்த, சூடிய சென்னி - திருமுடியை உடையவனும் ஆகிய,
தொடர்மணிப் பூணினாற்கு - நீண்ட மணியணிகளைப் புனைந்த சுவலனசடி அரசனுக்கு,
சுச்சுதன் சொல்லக்கேட்டு - சுச்சுதன் என்னும் அமைச்சனானவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்து, படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் - ஒளிபரவிய மணிமாலையையும் தளிர் மாலையையும் அணிந்த பவச்சுதன் என்னும் அமைச்சன், பகரல் உற்றான் - தன் எண்ணத்தைச் கூறத்தொடங்கினான், (எ - று.)

இதுவரையில் சுச்சுதன் அரசனுக்குக் கூறியவைகளைக் கேட்டக் கொண்டிருந்த பவச்சுதன்
என்பவன் இப்பொழுது தன்னுடைய எண்ணத்தைக் கூறத் தொடங்கியிருக்கிறான். யானை,
..........பட்டத்து யானை எனினுமாம்.

( 69 )