(இ - ள்.) மானக்கோதை - பெருமை பொருந்திய மாலையிணை யணிந்த, மாசறுவேலோர் - குற்றமற்ற வேற்படையையுடையவனே! நானக் கோதை நங்கை பிறந்த நாளால் - கத்தூரி மணங்கமழும் மாலையை யணிந்த சுயம்பிரபை தோன்றிய நாளில், வரவு எண்ணி - மேல் நிகழப் போகின்றவைகளை நினைத்து, வானக்கோளின் மாண்புணர்வார்கள் - விண்ணிற் செல்லும் கோள்களின் (கிரகங்களின்) பெருமையை யறிந்தவர்கள், மறு இல்லாத் தானக்கோளில் - குற்றமில்லாத இருப்பிடங்களில் கோள்கள் அமைந்துள்ளமையால், சாதகவோலை - பிறந்தநாட் குறிப்புச் சுவடியை, தலைவைத்தார் - சிறந்ததாகக் குறித்து வைத்துள்ளார்கள். (எ - று.) பிறந்தநாட் குறிப்புச் சிறந்ததாக விளங்குகின்றது என்றல். தலை வைத்தல், மற்றவைகள் யாவற்றிற்கும் முதன்மையாய் இருக்கச் செய்தல் |