இதுபும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்

312. நங்கோ னங்கை நன்மக னாகி 1நனிவந்தான்
தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்
எங்கோ னென்றே யிவ்வுல கேத்து 2மியறன்னால்
செங்கோ லின்பஞ் 3சேர்பவ னன்றே செருவேலோன்.
 

     (இ - ள்.) நம் கோன் - நம்முடைய வேந்தனாகிய சடியரசனுடைய, நங்கை -
மகளாகிய சுயம்பிரபைக்கு, நன்மகன் ஆகி நனி வந்தான் - நல்ல மணமகனாகத்
தவமிகுதியால் தோன்றியவன், தங்கோன் ஏவ - தன் தந்தையாகிய அரசன் ஏவுதலானே
இளவேந்தாய்த் தலை நின்றான் - இளவரசுப் பட்டம் பெற்றவனாய் அவன் ஏவலிற்
றலைசிறந்து நின்றவன், இவ்வுலகம் - இப்பேருலகமெல்லாம், எங்கோன் என்று ஏத்தும்
இயல் தன்னால் - இவன் எம் மன்னன் என்று பாராட்டுதற்குரிய அரசிலக்கண
முடைமையால், செங்கோல் இன்பம் சேர்பவன் - புதிதாக இவனை மணந்த பின்
செங்கோல் ஏந்தும் சிறப்பினைப் பெறுபவன், செருவேலான் - போரின்கண் மிக்கு
விளங்கும் வேற்படையை உடையவன், (எ - று.)

பவச்சுதன் அவையோரை நோக்கிக் கூறுகின்றான் ஆதலால் நங்கோன் என்றான்.
இச்சாதகக் குறிப்பெல்லாம் அச்சுவக்கிரீவன்பால் இல்லை என்பது குறிப்பு. எனவே அவன்
இவள் கணவன் ஆகான் என்பது கருத்து.

( 74 )