சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்

314. ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே
ஊழிக் கால மோடின வென்று முரையாலும்
தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ
சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய்.
 

     (இ - ள்.) சூழிக்கோலச் சூழ்களியானை - முகபடாத்தினால் அழகு படுத்தப்பெற்றுப்
பலவாகசச் சூழ்ந்த களிப்புடைய யானைகளையும், சுடர் வேலோய் - ஒளி செய்கின்ற
வேற்படையையுமுடைய அரசனே!, ஆழிக்கோமான் அச்சுவகண்டன் அவனுக்கு -
உருளைப்படையை யேந்திய அரசனாகிய அச்சுவக்கிரீவனுக்கு, ஊழிக்காலம் - வாழ்நாள்,
ஊழிக்காலம் போன்று பெரிதும் கழிந்தன; என்னும் உரையாலும் - உன்று உலகத்தவர்
கூறுஞ் சொற்களாலும், தாழிக்கோலப் போது அன கண்ணாள் தகுவாளோ - தாழியில்
வைத்து வளர்க்கப்பட்ட அழகு பொருந்திய குவளைப்பூவையொத்த கண்ணையுடையவளாகி சுயம்பிரபை மணமகளாம் தகுதி பொருந்தியவளாவாளோ? (எ - று.)

அச்சுவக்கிரீவன் அகவை மிகுந்தவன் என்று உலகத்தார் உரைக்குஞ் செய்தியை இதனால்
கூறினான். அதனால் சாதகவோலை காமப் பருவத்தாள் என்றதற்கு அச்சுவக்ரீவன்
அமையாமை காட்டினான்.

( 76 )