(இ - ள்.) கொய்யா விம்மும் கொங்கலர் தாரோய் - கொய்து தொடுக்கப்பெற்று மணம் வீசும் மலர்மாலையை அணிந்தவனே!. மையார் சென்னி மால்வரையாளும் - முகில்கள் படியப்பெற்ற முடிகளைக் கொண்ட பெரிய மலைகளை அரசாட்சி செய்யும், வயமொய்ம்பில் - மிகுந்த வலிமையினையும், கையார் எஃகில் காளைகள் தம்முள் - கையில் வேற்படையையுமுடைய இளைஞர்களுக்குள், கமழ் கோதை மெய்யாமேவும் - மணம் வீசும் மாலையை யணிந்த சுயம்பிரபை வாய்மையாகக் காதலித்தற் குரிய; மேதகுவானை - சிறப்பமைந்தவனை, மிக எண்ணி - மிகவும் ஆராய்ந்து முடிவு செய்துஇ கொடு என்றான் - கொடுப்பாயாக என்று கூறினான். (எ - று.) இது சடிமன்னன் பவச்சுதனுக்குக் கூறியது. கோதை - சுயம்பிரபை. மெய்யா - மெய்யாக. மே - மேன்மை. தாரோய் என்றது பவச்சுதனை விளித்தது. |