திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்

324. சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்
வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் 1மல்லா
டேந்துதோ ளரசர் றிவனளி தாங்க னென்பான்
காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ
டொப்பான்.
 

     (இ - ள்.) செந்து எரி செம்பொன் வீதி - சிவந்து விளங்குகின்ற
செம்பொன்னாலாகிய தெருக்களையுடைய, திரிபுரம் அதனை ஆளும் - திரிபுரம் என்னும்
நகரத்தை அரசாட்சி செய்யும், வாய்ந்து எரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் -
பொருந்தி விளங்குகின்ற வைரத்தி னாலாகிய பசிய அணிகலன்களையணிந்த அரசனுடைய
மகன், நளிதாங்கன் என்பான் - நளிதாங்கன் என்னும் பெயரையுடையவன், கல்வியாற்
கடலோடு ஒப்பான் - கல்வியிற் கடல் போன்று மிக்கவன், இவன் மல்லாடு ஏந்து தோள்
அரசர் போர் ஏறு - இவன் மற்போர் புரிவதிலே புகழ்படைத்த தோள்களையுடைய
அரசர்களுக்குச் சிங்க ஏற்றினைப்போன்றவன், காய்ந்து எரிகனலின் வெய்யோன் - சினந்து
எரிகின்ற தீயினுங் கொடியவன், (எ- று.)

நளிதாங்கன் கல்வியாற் பெரியவன் மற்போர்புரிவதில் வல்லவன் மிகுந்த சீற்றமுடையவன்
என்க. அளிதாங்கன் எனப் பிரித்தலுமாம்.

( 86 )