சித்திரகூடத்து அரசன் மகன் ஏமாங்கதன்

325. செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்
அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் 2சிறுவ னந்தார்
இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா.
 

     (இ - ள்.) மன்னா - அரசனே! செந்தளிர் புதைந்த சோலை - சிவந்த தளிர்கள்
நிறைந்த பொழில்களாற் சூழப்பெற்ற, சித்திரகூடம் ஆளும் - சித்திரகூட நகரத்தை
அரசாட்சி புரிகின்றவனும், அம்தளிர் அலங்கல் மாலை அரசர்கோன் சிறுவன் - அழகிய
தளிர்கள் இடையிடை தொடுத்துக் கட்டப்பெற்ற மாலையினையணிந்தவனுமாகிய அரசர்
பெருமானுடைய மகன், அம்தார் இந்திரன் புதல்வன் அன்னான் - அழகிய மாலையினை
யணிந்த இந்திரன் புதல்வனாகிய சயந்தனை ஒத்தவன், ஏந்தல் எமாங்கதற்கு -
சிறந்தவனாகிய அவ்வேமாங்கதனுக்கு, இம்மந்திர உலகில் வாழும் மன்னர் மாறு இல்லை -
இவ்வித்தியாதர ருலகத்தில் அரசாட்சி செய்யும் அரசர்கள் எவரும் பகையுடையவர்கலலர், (எ - று.)

பேராற்றலும் சூழ்ச்சித்திறனும் பிற நலங்களும் உடையனாதலின் பகைவர்கள் இலராயினர் என்க.

( 87 )