(இ - ள்.) அருமணி அடுத்த வீதி - அரியமணிகள் பொருந்திய தெருக்களையுடைய, அச்சுவபுரமது ஆளும் - அச்சுவபுரத்தினை அரசாட்சி செய்கின்ற, திருமணி திகழும் பூணான் பெருமகன் - அழகிய மணிகள் பதித்துச் செய்யப்பட்டு விளங்கும் அணிகலன்களை யணிந்த அரசனுடைய தலைமகனும், சிறைவண்டு என்னும் கருமணி துதைந்த பைந்தார்க்கனக சித்திரனை அன்றே - சிறைகளையுடைய வண்டுகள் என்று கூறப்பெறுகின்ற கரியமணிகள் பொருந்திய பசிய மாலையினை யணிந்தவனுமாகிய கனகசித்திரனையல்லவோ, நிலம் - நிலவுலகமானது, ஒரு மணிதிலதமாக உடையது என்றான் - ஒப்பற்ற அழகிய நெற்றிப் பொட்டைப்போலப் பெற்றிருக்கின்றது என்று கூறினான், (எ -று.) வண்டுகள் குண்டு குண்டாகக் காணப்படுதலின் “சிறைவன் டென்னும் கருமணி“ என்றார். |