சீ நிலையத்தரசன்மகன் சித்திரரதன்

327. சீரணி முழவ மோவாச் 1சிரீநிலை யதனை யாளும்
காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த
தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் 2பேரான்
தாரணி 3மார்பனன்றெ தரணிக்கோர் திலத மாவான்.
 

     (இ - ள்.) சீர்அணி முழவம் ஓவா - சிறப்புப் பொருந்திய அழகிய மத்தளவொலி
நீங்கப்பெறாத, சிரீநிலை அதனை ஆளும் - திருநிலையம் என்னும் நகரத்தினை அரசாட்சி
புரிகின்ற, கார் அணி தடக்கை வேந்தன் கான்முளை - கொடையினால் முகிலைப் போலும்
அழகிய பெரிய கைகளையுடைய அரசன் மகனும், கனபொன் ஆர்ந்த தேர் அணி
அரசத்தானை - அழகிய பொற்றகடுகள் பதிக்கப்பெற்ற தேரையும் இனிய ஒலி மிக்க
படையையுமுடைய, சித்திரத்தேரின் பேரான் - சித்திர ரதன் என்னும் பேரையுடையவன்,
தார் அணி மார்பன் அன்றே - மாலையால் அழகு பெற்ற மார்பினையுடைய
அவனல்லனோ, தரணிக்கோர் திலதமாவான் - உலகிற்கு மிகச் சிறந்தவனாக
விளங்குகின்றவன், (எ - று.)
சித்திர ரதன் மிகவும் சிறந்தவன் என்றபடி.

( 89 )