கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது

328. கற்றவர் புகழுஞ் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செகுக்குஞ் செய்கை 4செருவல்லான் சிங்ககேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான்.
 

     (இ - ள்.) கற்றவர் புகழுஞ் சீர்த்தி - அறிஞர்களால் விதந்தோதப் பெறுகிற மிகுந்த
புகழையுடைய, கனகபல்லவத்தையாளுங் கொற்றவன் சிறுவன் - கனகபல்லவம் என்னும்
நகரத்தை அரசாட்சி செய்கின்ற அரசனுடைய மகனும், கோலக் குங்குமக் குவவுத்தோளான்
- அழகிய குங்குமம் அணியப்பெற்ற பருத்த தோள்களையுடையவனும், செற்றவர்ச்
செகுக்குஞ் செய்கைச் செருவல்லான் - பகைவர்களையழிக்கும் செயலாகிய போரிலே
வல்லவனும் ஆகிய, சிங்ககேது - சிங்ககேது என்பவன், பிறந்த பின்னாம் - பிறந்தற்குப்
பிறகுதானாம், மண்மகள் மகிழ்ந்தது என்றான் - நிலமகள் மகிழ்ச்சியையடைந்தது என்று
கூறினான், (எ - று.)

சிங்ககேதுவின் சிறப்பை நோக்கி நிலமகள் மகிழ்ச்சி யடைந்தனள் என்க.

( 90 )