சுதசாகரன் என்பவன் சொல்லுதல்

332.

அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கணி சாந்து 1ம் வனைந்துராய்
மல்லி னான்மலி 2மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே.
 

    (இ - ள்.) அல்லி நாண்மலர் தாரும் - அகவிதழ்களையுடைய அன்றலர்ந்த
மலர்மாலையும், முத்தாரமும் - முத்து மாலையையும், வல்லி ஆங்கு அணிசாந்தும்
வனைந்து - கொடியாக அங்கு எழுதப்படுகின்ற சந்தனத்தையும் அணிந்து, உராய்
மல்லினால் மலி மார்பற்கு - மோதுகின்ற மற்போரிலே சிறந்து விளங்குகிற மார்பையுடைய
சடியரசனுக்கு, இவை - மேற் கூறப்போகும் மொழிகளை, சுதசாகரன்-சுகசாகரன் என்னும்
பெயரினை யுடைய அமைச்சன், சொல்லினான் - சொல்லத் தொடங்கினான், (எ - று.)

சுதசாகரன் என்னும் அமைச்சன் தன் எண்ணங்களை வெளியிடுகிறான். ஆங்கு -
அசையுமாம். என்ப : அசை.
 

( 94 )