பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்

334. ஆயி னுஞ்சிறி துண் 1டறி வண்டினம்
பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் 2வேலினாய்.
 

     (இ - ள்.) சுடர் வேலினாய் - ஒளிதவழுகின்ற வேற்படையை யுடையவனே!
ஆயினும் சிறிது உண்டு அறி - ஆனாலும் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டியதும்
இருக்கின்றது அதனையும் அறிந்துகொள்வாயாக அஃதென்னெனின், வண்டினம் பாயினும்
பனிக்கும் - வண்டுக்கூட்டங்கள் மாலையிற் பாய்ந்தாலும் அதனால் வருந்துதலையடையும்,
படர் கோதை தன் - படர்ந்த மாலையினையணிந்த சுயம்பிரபையின், வேயினும்
பணைக்கின்ற மென்தோள் - மூங்கிலைக்காட்டினும் பருத்து விளங்குகின்ற
மெல்லியதோளை, பிறர் தோயினும் பகையாம் - மற்றைய அரசர்கள் சேர்ந்தாலும்
அச்சுவகண்டனுடைய பகை நமக்கு உண்டாவதாம், (எ-று.)

( 96 )