அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்

335. வண்ட வாமுடி 3மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு 4வேலினாய்.
 

     (இ - ள்.) விண்டு வாழுநர் மேல் - பகைமையினால் வேறுபட்டு வாழ்பவர்கள்மேல்,
நகும் வேலினாய் - இகழ்ந்துநகையாடல் புரியும் வேற்படையை யுடையவனே!, வண்டு
அவாம்முடி மன்னருள் - வண்டுகள் விரும்புகின்ற மாலையையணிந்த முடியரசர்களுள்ளே,
அவன் தண்டம் ஆற்றுநர்தாம் இலை - அவ்வச் சுவக்கிரீவனுடைய தண்டனையைத்
தாங்கக் கூடிய அரசர்கள் இல்லை, யான் உரைப்பான் உறுகின்றது - யான்
சொல்லும்படியாகவுள்ளது, சிறிது உண்டு - சிறிது இருக்கின்றது, (எ - று.) ஆல் : அசைநிலை.

அச்சுவகண்டனுடைய பகையைத் தேடிக்கொள்ளக்கூடாது என்னும் குறிப்புடன் கூறுகிறான்.

( 97 )