மேகவானகன் மனைவி மேகமாலினி

337.

நாக மாலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய 1வாயிசை கைவிடாத்
தோகை மாமயில் 2போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி 3யென்றுரை மிக்குளாள்.
 

      இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர்

         (இ - ள்.) நாகமாலைகன் மேல்நகு வண்டினம் - சுரபுன்னை மலர்களால்
தொடுக்கப்பெற்ற மாலைகளின்மேல் விளங்குகிற வண்டுக் கூட்டங்கள், ஏக மாலையவாய் -
ஒரே மாலையாகப் பொருந்தி, இசை கைவிடா - இசைபாடுதலில் நின்றும் நீங்காமைக்குக்
காரணமானவளும், தோகைமா மயில்போல் - தோகையமைந்த அழகிய மயிலைப் போன்ற
வளும், சுரிகூந்தலாள் - சுருண்டு தொங்குங் கூந்தலையுடையவளும் ஆகிய, மேகமாலினி
என்று உரை மிக்குளாள் - மேகமாலினி என்று பெயர் கூறப் பெறுகிற புகழ்மிகுந்த நங்கை,
(எ - று.)

மகனின் சிறப்பு விளங்குதற்குத் தாய் தந்தையர்கள் முன்னர்க் கூறப்பட்டனர்.

( 99 )