அவர்களுடைய மகன் விச்சுவன்

338. தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்
ஏவி நின்றினி தாண்டிடு 4மீட்டினான்.
 

      (இ - ள்.) தேவி - மேகவாகனன் மனைவியாவாள்; அவள் தெய்வம் வழிபட -
அவள் தன்னுடைய வழிபடு தெய்வத்தைப் போற்றி வழிபாடு செய்ய, விச்சுவன் என்பவன்
மேவி வந்தனன் - விச்சுவன் என்னும் பெயரையுடையவன் விருப்பத்துடன் அவளுக்கு
மகனாகப் பிறந்தனன், ஓவில்தொல்புகழான் உளன் - அவன் நீங்காத
பழம்புகழையுடையவனாக இருக்கிறான், கூற்றமும் - காலனையும், ஏவிநின்று இனிது
ஆண்டிடும் ஈட்டினான்- பணிசெய்யுமாறு தொழிற்படுத்தி நின்று இனிமையாக
ஆட்கொள்ளத் தக்க வலிமையினை யுடையவன், (எ - று.)

கூற்றத்தையும் தன்வழிப்படுத்தி ஆளத்தக்கவன் எனவே மற்றையோரைத் தன் வழிபடுத்தி
ஆளுதல் வல்லவன் என்பது தானே போதரும்.

( 100 )