அவளுடைய பெயர் சோதிமாலை

344.

கோதின் மாலைகள் மேற் 1குதி கொண்டெழு
கீத மாலைய கின்னர வண்டினம்
2ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள்.
 

      (இ - ள்.) கோதின் மாலைகள் மேக்குதி கொண்டு எழு - குற்றமற்ற மாலைகளின்
மேல் குதித்தலைக்கொண்டு எழுகின்ற, கீத மாலைய கின்னர வண்டினம் -
இசைவரிசைகளில் அமைந்த கின்னரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற வண்டுகளின்
கூட்டம், குழல் மாலையவாய் ஊதி உறையும் - கூந்தலிடத்திலே அணியப்பெற்ற மாலையில்
ஊதித் தங்குதலையுடைய வளும், சுடர்ப்பூணினாள் - ஒளிமிக்க அணிகலன்களை
யணிந்தவளுமாகிய அவள், சோதிமாலை என்பாள்-கோதிமாலை என்னும்
பெயரையு டையவள் (எ-று.)

( 106 )