(இ - ள்.) கோதின் மாலைகள் மேக்குதி கொண்டு எழு - குற்றமற்ற மாலைகளின் மேல் குதித்தலைக்கொண்டு எழுகின்ற, கீத மாலைய கின்னர வண்டினம் - இசைவரிசைகளில் அமைந்த கின்னரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற வண்டுகளின் கூட்டம், குழல் மாலையவாய் ஊதி உறையும் - கூந்தலிடத்திலே அணியப்பெற்ற மாலையில் ஊதித் தங்குதலையுடைய வளும், சுடர்ப்பூணினாள் - ஒளிமிக்க அணிகலன்களை யணிந்தவளுமாகிய அவள், சோதிமாலை என்பாள்-கோதிமாலை என்னும் பெயரையு டையவள் (எ-று.) |