(இ - ள்.) சுடர் வேலினோய் - ஒளியமைந்த வேற்படையையுடைய வனே, இன்ன ஆறு இசையப்பெறின் - நான் கூறியபடி இவ்வாறு அமையப்பெற்றால், யாவரும் என்னவாறும் இகப்பவர் இன்மையால் - எத்தகையோரும் எவ்வாறும் மறுக்க மாட்டார்களாகையால், அன்ன ஆறு அருள்உண்டெனில் - அவ்வாறு செய்வதற்கு மனமுள்ளதாயின், ஆய்ந்து யான் சொன்னவாறு கொண்டீக - ஆராய்ச்சி செய்து நான் சொன்னபடி கொடுப்பாயாக! (எ - று.) சுதசாகரன் தன்னுரையை இத்துடன் முடித்துக்கொள்கிறான். |