அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்

353. பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்
தங்கிடய தடங்கொண் மார்பன் 2சயசேன னவற்குத் தேவி
செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே.
 

      (இ - ள்.) பங்கயப் பழன வேலிப் பவகிரி அரசன் - தாமரை மலர்ந்த வயல்களை
வேலியாகவுடைய பவகிரி என்னும் நாட்டின் அரசன், பைந்தார் தங்கிய தடங்கொள்
மார்பன் சயசேனன் - பசியமாலை தங்கிய அகன்ற மார்பையுடைய சயசேனன் என்பவன்,
அவற்குத் தேவி - அவனுடைய மனைவி, செங்கயல் நெடுங்கன் செவ்வாய்ப் பிரீதிமதி -
செவ்விய கயல போன்ற நீண்ட கண்ணையும் சிவந்த வாயையுமுடைய பிரீதிமதி என்பவள், பயந்த காளை - பெற்ற மகன், வெம்களி யானை வல்ல விசயபத்திரன் என்பான் - கொடிய
களிப்புப்பொருந்திய யானையைப் போலும் ஆற்றலுடைய விசயபத்திரன் என்னும்
பெயரையுடையவன் (எ - று.)

( 115 )