(இ - ள்.) மந்திரத்து அரசர் கோவே! - விச்சாதரருலகத்து மன்னர் மன்னனே!, அவன் வையங்காக்கும் தந்திரம் துறந்து - அந்த விசயபத்திரன் உலகத்தைக் காக்குஞ் செய்கையை நீங்கி, நோற்று - தவஞ்செய்து, சரசாரம் என்னும் இந்திர உலகம் எய்தி - சாசரம் என்னும் பெயரையுடைய இந்திர உலகத்தையடைந்து, ஏழொடு ஈர் ஐந்துமுந்நீர் அந்தர காலம் - பதினேழு கடற்றொகை ஆண்டு அளவு, தேவர்க்கு அரசனாய் ஆண்டுவந்தான் - விண்ணவர்கட்கு அரசனாக அரசாட்சி செய்திருந்தான் (எ - று.) மந்திரத்தரசர் கோவே என்றது யசோதரமுனிவர் கூற்று; சுரேந்திர காந்தத்து அரசனை விளித்தது. சாசாரம் - கற்பலோகம் பதினாறனுள் ஒன்று. இது சகஸ்ராரம் என்பதின் திரிபு. |