(இ - ள்.) வேந்தே - அரசனே!, அம்மையால் தவங்கள் தாங்கி - முற்பிறப்பின் நல்வினையால் தவங்களைச் செய்து, அலர்ந்த நல்லறிவி னாலும் - விரிந்துள்ள மெய்யறிவினாலும் இமமையால் உடம்பு நீங்கி - இப்பிறப்பின்கண் உடலானது நீங்கப்பெற்று, இகந்துபோம் இயற்கையாலும் - விலகிப் போகின்ற இயல்பினாலும், செம்மையால் - சிறப்பினால், கடவுள் தானம் சேர்வதே சிந்தையாற்கு - கடவுளின் நிலையை அடைதலே எண்ணமாகவுடையவனுக்கு, மெய்ம்மையால் - உண்மையாக, கருமச் சுற்றம் வேண்டுவது இல்லை - வினைசெயற்குத் துணையாவராகிய மனைவி மக்கள் முதலாயினோர் வேண்டியவராகார் (எ - று.) வீடுபேற்றில் விருப்புள்ளவர்கள் உலகச் சுற்றத்தை விரும்பார்கள் என்க. |