(இ - ள்.) என்று அவன் மொழிந்த போழ்தில் - மேற்கூறியவாறு சுமந்திரியானவன் சொல்லியபொழுது, ஏனையார் இனிதின் நோக்கி - மற்றைய அமைச்சர்கள் அரசனை இனிமையுடன் பார்த்து மின்தவழ் விளங்கு வேலோய் - ஒளியமைந்து விளங்குகின்ற வேற்படையை யுடையவனே !, மெய் இனும் மேவல் வேண்டும் - உண்மையை இன்னும் நன்கு ஆராய்ந் துணர்தல்வேண்டும், அவன்மனையுள் நீயே சென்று வினவு என - சதவிந்து நிமித்திகனுடைய இல்லத்திற்கு நீயே சென்று கேட்பாயாக என்றுகூற, சேனைவேந்தன் - படையையுடைய சுவலனசடியரசன், நன்றவர் மொழிந்த எல்லாம் - நன்மையை யுடையவர்களாகிய அமைச்சர்கள் கூறியவைகளையெல்லாம், நல்லவா - நல்ல மொழிகளாக, நயந்து கேட்டான் - விரும்பிக் கேட்டுக்கொண்டான் (எ - று.) ஏனையார் - ஏனை அமைச்சர். அவன் - அச்சதவிந்து. சேனை வேந்தன் என்றது சடியரசனை. நல்லவாறு - ஈறுதொக்கது. |