வேறு
நண்பகலாதல்

363. மிகுகதிர் 1விலங்கலார் வேந்தன் 2றேனுடைந்
துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி
நகுகதிர் மண்டில 3நடுவ ணின்றதே.
 

     (இ - ள்.) மிகுகதிர் விலங்கலார் வேந்தன் - மிகுந்த ஒளிதங்கிய
வெள்ளிமலையையுடைய அரசன், தேன் உடைந்து உகுகதிர மண்டபம் - தன்பால் அணிந்த
மலர்மாலைகளினின்றும் தேனானது வெளிப்பட்டுச் சிந்து கின்ற ஒளிதங்கிய மண்டபம்,
ஒளிர ஏறலும் - விளங்குமாறு அடைந்த அளவில், சுடுவன தொகுகதிர் பரப்பி - எதிர்பட்ட
பொருள்களைச் சுடுவன வாய்க்கூடிய ஒளிகளைப் பரப்பி, சூழ்ஒளி நகுகதிர் - சுற்றிலும்
ஒளியானது விளங்குகின்ற கதிரவனாகிய ஞாயிறு, நடுவண் நின்றது - வானத்தின்
நடுவிடத்தைப் பொருந்தியது. (எ - று.)
அரசன் தனது இருப்பிடத்தை அடைந்தபோது நண்பகலாயிற்றென்க.

( 125 )