367. பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே.
 

      (இ - ள்.) பங்கயத் துகள் படு பழன நீர்த்திரை - தாமரைப் பூந்தாது படிந்த
மருதநிலத்துள்ள நீர்நிலைகளின் அலைகள், மங்கையர் முலையொடு பொருத - அவற்றில்
ஆடா நின்ற மகளிர்களின் முலைகளோடு மோதாநின்றன, வாவிகள் -
அவ்வலைகளையுடைய அக்குளங்களோ, அங்கு அவர் அழித்த அரிசனச் சேற்றினும் -
அவ்விடத்தே அம்மகளிர் அழித்த மஞ்சட் குழம்பானும், குங்குமக் குழம்பினும் - குங்குமக்
குழம்பானும், குழம்பு கொண்ட - தம்மகங் குழம்புவனவாயின (எ - று.)

பழனம் - ஈண்டு மருதத்தின் மேனின்றது. அலைகள் முலையொடு பொருத;
அவற்றையுடைய வாவிகள் அகங்குழம்பின என்ற நயம் உணர்க. அரிசனம் - மஞ்சள். அஞ்சனமென்றும் பாடம்.

( 129 )