368. அங்கள்வாய்க் கயம்வள ராம்ப றூம்புடைப்
1பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கைவாய்க் குழலவர் 2குளிப்ப விட்டன
திங்கள்வாண் முகவொளி திளைப்ப 3விண்டவே.
 

     (இ - ள்.) கொங்கைவாய்க் குழலவர் - கொங்கைகளின் மேற்படிந்த கூந்தலையுடைய
மகளிர், குளிப்ப - தாம் நீராடுதற் பொருட்டு, கயம் வளர் - அக்குளத்திலே வளராநின்ற,
தூம்பு உடை அம்கள் வாய் ஆம்பல் பொங்குகாடு - தண்டினையுடைய அழகிய தேன்
பொருந்திய வாயையுடைய ஆம்பலாகிய மிக்க காட்டின்கண், ஏர்பட ஞெறித்து -
அழகுண்டாக நெரித்து, பூவொடு விட்டன - இயற்கையாகவே மலர்ந்த பூக்களோடு
விடப்பட்ட நாளரும்புகள், திங்கள் வாள் முகவொளி திளைப்ப - அம்மகளிரின்
திங்கள்போன்ற ஒளியையுடைய முகத்தின் ஒளி படுதலானே, விண்ட -மலர்ந்தன (எ - று.)

மகளிர் நெரித்துவிட்டனவாகிய அரும்புகள் அவர் முகவொளி திளைத்தலாலே மலர்ந்தன
என்க. விட்டன - பெயர். ஞெறித்து - நெரித்து. நெரித்து விட்டன - என்றதனால்
அரும்புகள் என்பது பெற்றாம். திங்கள் ஒளியினால் ஆம்பல் மலர்தலுண்மையின் இங்ஙனம்
கூறினார். நீருண்முழுகி எழுதலாற் குழல் கொங்கைமேற் படிந்தன என்க.

( 130 )