(இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, பொழுது கண்ணகற்ற - காலமானது கடந்துகொண்டிருக்க, ஆயிடை - அவ்வேளையில், பன்அரும் - கூறுதற்கு அருமையான, காலநூல் பயின்ற - பொழுதளவை நூலினைக் கற்றுணர்ந்த, பண்பு உடைக்கன்னலங் கருவியோர் - பான்மையமைந்த நாழிகை வட்டிலையுடையவர்கள், கழிந்த நாழிகை - அதுவரையிற் சென்றுள்ளபொழுதை, மன்னவன் - அரசனின், அடிமுதல் உணர்த்தி - முன்னாலே தெரியப்படுத்தி. வாழ்த்தினார் - வாழ்த்துரைகள் கூறினார்கள். (எ - று.) |