(இ - ள்.) கள்இதழ்க் கண்ணியான் - தேன்பொருந்திய இதழ்களமைந்த பூவால் கட்டப்பெற்ற மாலையை அணிந்தவனாகிய அரசன், வெள்இழை பொலிந்து - வெள்ளிய அணிகலன்கள் சிறந்தமைந்து, ஒளிதுளும்பும் மேனியன் - ஒளிமிகுந்து விளங்குகின்ற உடலையுடையவனாகவும், வள் இதழ் மல்லிகை மலர்ந்த மாலையன் - செழித்து வளர்ந்த இதழ்களமைந்த விளக்கம் பொருந்திய மல்லிகை மாலையை உடையவனாகவும், அள் இதழ்ப் புதுமலர் அடுத்த வீதிமேல் - நெருங்கிய இதழ்களையுடைய அன்றலர்ந்த மலர்களை இறைக்கப்பட்ட தெருவில், காலின் ஏகினான் - ஊர்திகளிற், செல்லாது காலாலே நடந்து சென்றான் (எ - று.) வெள்ளிழை வெள்ளை நிறமுடைய மணிமாலைகளும் ஆடைகளுமாம். வெள்ளிழை யணிதலும் மல்லிகைமாலை சூடலும் மங்கலங் கருதின. பெரியோரைக் காணச் செல்கின்றான் ஆகலின் காலின் ஏகினான் என்றார். காலின் ஏகினான் என்றது ஊர்திகளில் ஏகாமல் என்பதுபட நின்றது |