அரசன் அடைந்த காரியத்தைச் சதவிந்து கூறுதல்

382.

மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
1வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் 2விரிந்தநூ லலர்ந்த நாவினான்.
 

    (இ - ள்.) அணங்கு எழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான் - தெய்வத்தன்மையும்
அழகும் மிகுந்த நிமித்த நூற்புலமையிற் பயின்று மலர்ந்த செந்நாவினையுடைய சதவிந்து
வேந்தனை நோக்கி வேந்தே!, கருதிற்று - நீ இப்பொழுது நினைத்த காரியம், மணம்கமழ்
மதுமலர் அலங்கன் மாலைபோல் - நறுமணம் பொருந்திய தேன் அமைந்த மலர்களால
கட்டப் பெற்றதாகிய அசைகின்ற மாலையைப்போல், வணங்கு எழில் - கண்டாரை
வணங்கச் செய்யும் அழகினையும், நுடங்குஇடை - தளருகின்ற மருங்குலையும் உடைய, நம்
மாழைநோக்கி கணம் குழை - நம்முடைய மாவடுப்போலும் கண்ணமைந்தவளும் வட்டமான
குழை என்னும் காதணிகளை யணிந்தவளுமாகிய சுயம்பிரபையின், கருமம் ஆம் என்றனன்
- மணவினைச் செயல் ஆகும் என்று கூறினன் (எ - று.)

சதவிந்து நிமித்திகனுடைய நிமித்திக ஆற்றல் இதனாலும் பெறப்படுதல் காண்க.
 

( 144 )