384. 1பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
2மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
3மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்.
 

      (இ - ள்.) பொன் சுடர் சுலாம் இழைபொறுத்த - பொன்னினது
ஒளிபரவுகின்றனவும் மணிகள் வைத்திழைக்கப் பெற்றனவுமாகிய, பூண் - அணிகலன்களை
அணிந்த, முலை - முலையினை உடையவளும், மின்சுலாம் - மின்னல்போன்று துவளும்,
நுடங்கு இடை - ஒசியாநின்ற இடையினையும் உடைய, மெல்லியாள் திறம் - மென்மைமிக்க
அச்சுயம்பிரபையின் பெருமை, என்சொலால் - ஆற்றலிலாத என்னுடைய எளிய
சொற்களாலே, இன்று - இப்பொழுது, யான் இயம்பும் - யான் கூறுதற்கு, நீரதோ - எளிமையுடையதேயோ, மன்சுலா அகல - பகை மன்னர்கள் மனம் சுழன்று ஓடுமாறு, நின்று
- மறத்தோடேபொருந்தி, அலரும் - விளங்கும், வாளினாய் - வாட்படையை உடைய
வேந்தனே (எ - று.)
வாளினாய் இயம்பும் நீரதோ எனக்கூட்டுக.

( 146 )