உலகங்கள் எண்ணிறந்தன என்றல்

388. மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்
தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை 1யெண்ணி றந்தவே.
 

     (இ - ள்.) ஏவலாய் - எய்தற் றொழில் வல்ல வேந்தனே!, மூவகை உலகினுள்
நடுவண் - மண்ணகம் விண்ணகம் பாதலம் என்னும் மூன்றுவகை உலகத்துள்
நடுவிடத்ததாய்ப் பொருந்தியுள்ளதும், மூரிநீர்த் தீவினது அகலமும் - பெருமைபொருந்திய
நீராகிய கடலாலே சூழப்பட்டதுமாகிய மண்ணுலகத்தினது பரப்பும், சிந்துவட்டமும் -
கடல்வளைவும், ஓவல - ஒன்றைவிட்டு ஒன்று நீங்காவாய், ஒன்றுக்கு ஒன்று இரட்டி
கண்ணறை - ஒன்றைப் பார்க்கினும் மற்றொன்று இரட்டிப்பான இடப்பரப்பினையுடையதாய்,
விரிந்தவை எண்ணிறந்த - பரந்துள்ள உலகங்கள் கணக்கற்றனவாகும் (எ-று.)

சிந்து - கடல். கண்ணறை - அகலம். ஏவலாய் - விளி.

( 150 )