உலக அமைப்பு உரைத்தல்

389. மந்தர நெடுமலை நடுவின் 2வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளிசினை நாவன் மாமரம்
அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே.
 

     (இ - ள்.) இவ் அவனி வட்டம் - இந்த உலக வளைவானது, மந்தர நெடுமலை
நடுவின் வாய்ந்தது - மந்தரம் என்னும் பெயரையுடைய நீண்டமலை நடுவிடத்திலே
அமையப்பெற்றது, மருங்கு சுந்தர வேதிகை சூழ்ந்தது - சுற்றிலும் அழகிய திண்ணையாலே
சூழப்பெற்றது, நந்திய நளிசினை நாவல் மாமரம் - தழைத்துக் குளிர்ச்சி யமைந்த நாவல்
என்னும் பெயரினையுடைய பெரியமரத்தை, அந்தரத்து உடையது - அந்த மந்தர மலையின்
நடுவிடத்திலே அமையப்பெற்றது (எ - று.)

இதனால் உலகம் அமைந்தள்ள நிலைமையை உணர்த்தினார்.

( 151 )