உலகில் உள்ளன

390. 1குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
2மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே.
 

     (இ - ள்.) கொலைதருவேலினாய் - கொலையைச் செய்கின்ற வேற்படையை
யுடையவனே, இவ் அலைதிரை நெடுங்கடல் அவனிவட்டம் - அலைகின்ற திரைகள்
பொருந்திய நீண்ட கடலாலே சூழப்பெற்ற இந்த உலகமானது, இரண்டதாய் - இரண்டு
கூறுடையதாய், குலகிரி ஆறு கூர்கண்டம் ஏழ் குலாய் - மேன்மையமைந்த ஏழு
மலைகளையும் ஏழு ஆறுகளையும், பொருந்திய ஏழு கண்டங்களையும் உடையதாய் மேலும்,
மலைதிரை வளர்புனல் ஏழ் - கரையை மோதுகின்ற அலைகள் பொருந்திய ஏழு
கடல்களையும் உடையதாய், கூறப்பட்டது-சொல்லப்பட்டிருக்கிறது (எ-று.)

இவ்வவனி வட்டம் இரண்டு கூறுடையதாய் ஏழுகிரிகளையும் ஏழு பேரியாறுகளையும் ஏழு
கண்டங்களையும் ஏழு கடல்களையும் உடையதாய்க் கூறப்பட்டது என்க.

( 152 )