போக காலம் கழிதல்

393. வெங்கதிர்ப் 1பரிதியும் விரவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
2இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே.
 

     (இ - ள்.) பொங்கிய புரவியாய் - மிகுதியான குதிரை களையுடையவனே!
வெங்கதிர்ப் பரிதியும் - வெவ்விய ஒளியினையுடைய ஞாயிறும், தண்பனி விரவு அங்கதிர்
வளையமும் - மிகுந்த குளிர்ச்சியானது பொருந்தப்பெற்ற திங்கள் வட்டமும், ஆதியாயின -
முதலாயினவற்றை, இங்கு இவர் படைத்தனர் - இவ்வுலகத்தில் நான்முகனானவர்
உண்டாக்கினார், போக காலம் இவ்வகை இழிந்தது - போக பூமியாக அமைந்திருந்த
காலமானது இவ்வாறு சென்றது (எ - று.)

ஞாயிறு திங்கள் முதலியவைகளை நான்முகனார் படைத்தனர். இவ்வாறு போக காலம்
போயது என்க.

( 155 )