(இ - ள்.) ஊழி மூன்றாவது ஓய்ந்து - ஊழிக்காலமானது மூன்றாவது முடிவுபெற்று, இறுதி - அதன் பிறகு, மன்உயிர் சூழ்துயர் பலகெட - தோன்றி நிலைபெற்ற உயிர்த்தொகைகளைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அனைத்தும் ஒழிய, ஆழி அம்கிழமை எம் அடிகள் - அழகிய அறவாழியை உரிமையாகத் தாங்கிய எம்முடைய அருகக் கடவுள், ஈண்டு அருள் சோதி மூர்த்தியாய் தோன்றினார் - இவ்வுலகத்திற்கு அருள்புரிகின்ற ஒளி வடிவினராக எழுந்தருளினார் (எ - று.) பலவும் எனல் வேண்டிய முற்றும்மை விகாரத்தால் தொக்கது. சோதிமூர்த்தி - ஒளிவடிவினன். ஆழி - அறவாழி. அடிகள் - அருகக் கடவுள். |