(இ - ள்.) சூழிமால் யானையான் - முகபடாத்தை யணிந்த பெரிய யானையையுடையவனும், ஆழியால் அகல்இடம் வணக்கி ஆண்டவன் - ஆணையுருளையினாலே நிலவுலகத்தை வணங்கச் செய்து அரசாட்சி செய்தவனும், ஆகிய பாழியா நவின்ற தோள் பரதன் - பெருமையாகப் பேசப்பெற்ற தோளையுடைய அப்பரதன், ஒர்நாள் - ஒருநாள், ஊழியான் ஒளிமலர் உருவச் சேவடி - ஊழிக்காலத்திலு மழியாதவனாகிய அருகக்கடவுளது ஒளி விரியாநின்ற அழகிய திருவடிகளை, தொழுது வாழ்த்தினான் - வணங்கிப் போற்றினான். ஆங்கு, அசைநிலை (எ - று.) ஆழி - ஆணைச்சக்கரம். அகலிடம் - உலகம். பாழி - பெருமை. ஊழியான் - அருகன். ஒளிமலர் சேவடி என்க. வினைத்தொகை. ஆண்டவனும், யானையானும், ஆகிய பரதன் என்க. |