(இ - ள்.) கதிர்அணி மணிமுடி வணங்கி - ஒளிதங்கிய அழகிய மணிகள்பதித்துச் செய்யப்பெற்ற முடியைத் தாழ்த்தி வணங்கி, காவலன் எதிரது வினவினான் - பரதனானவன் எதிர்கால நிகழ்ச்சிகளைப்பற்றிக் கேட்டான், அதிர்தரு விசும்பிடை - முழக்கத்தையுடைய விண்ணின்கண், அமிர்தமாரி சோர் முதிர்தரு முகிலிடை - அமுதத்தை யொத்த மழையைப் பொழியும் நிறைந்த சூலினையுடைய முகிலிடை, முழங்கிற்று என்ன - முழக்கமுண்டானாற் போன்று, இறைவன் செப்பினான் - அருகக் கடவுள் அவ்வினாக்கட்கு விடைகூறி யருளினான் (எ - று.) முகிலிடை முழங்கினாற் போன்று இறைவன் செப்பினான் என்க. |