அருகக் கடவுள் கூறுதல்

400. என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் 1பலவர்கே சவர்கண் மாற்றவர்
2தொன்முத லவர்தொகை யொன்ப 3தொன்பதே.
 

     (இ - ள்.) என்முதல் இருபத்து ஈர்இருவர் நாதர்கள் - என்னை முதலாகக்கொண்டு
இருபத்துநான்கு பேர்கள் நாதர்களாவார்கள், நின்முதல் ஈர் அறுவகையர் நேமியர் -
உன்னை முதலாகக்கொண்டு பன்னிரண்டு பெயர்கள் ஆழியாணையாளர்
(சக்கரவர்த்தி)களாக வருவார்கள், மன்முதல் பலவர் கேசவர்கள் - அரசர்களாகிய
பலதேவர்களும் வாசுதேவர்களும், மாற்றவர் - பிரதிவாசுதேவர்களாகிய பகைவர்களும்
ஆகிய, தொன்முதல் அவர் தொகை ஒன்பது ஒன்பதே - பழைமை யுடைய இத்தலைவர்
தொகைகள் தனித்தனி ஒன்பது என்பர் (எ - று.)

எனவே, இருபத்துநான்கு தீர்த்தங்கரரும், பன்னிரு சக்கரவர்த்திகளும், ஒன்பது பலதேவரும்,
ஒன்பது வாசுதேவரும். ஒன்பது பிரதிவாசுதேவரும் என்றவாறாயிற்று. பலவர் - பலதேவர்,
கேசவர் - வாசுதேவர், வாசுதேவர் ஒன்பதின்மர்க்கும் பிரதி வாசுதேவர் ஒன்பதின்மரும்
பகைவர் ஆதலின். மாற்றவர் என்றார்.

( 162 )