(இ - ள்.) மன்னவ - பரதனே! நின்மகன் மரிசி - நின் மகனாகிய மருசி என்பவன், மாற்று இடைப்பொன் அவிர் - மாற்றுயர்ந்த சிறந்த பொன்னாலாகிய மாளிகை விளங்குகின்ற, போதனம் உடைய - போதனமா நகரத்தினை உரிமையாக வுடையவனும், பூங்கழல் கொல்நவில் வேலவன் குலத்துள் தோன்றினால் - அழகிய வீரக்கழலை யணிந்தவனும் கொலைத் தொழிலைத் தோற்றத்தாலே கூறிவிளங்குகின்ற வேற்படையை யுடையவனுமாகிய அரசனுடைய குலத்திலே பிறந்தால், அன்னவன் - அவன், கேசவர்க்கு ஆதியாகும் - முதலாவது வாசுதேவன் ஆவான் (எ - று.) மன்னவ - அண்மைவிளி. மரிசி. மருசி. போதனம் - போதன நகரம். போதனமுடைய வேலவன் என்றது பயாபதி வேந்தனை. கேசவர் - வாசுதேவர். |