(இ - ள்.) கேசவனார் திறம் கிளப்பின் - அந்த முதல் வாசுதேவனுடைய தன்மையைச் சொல்லுமிடத்து, அவன் வெண்மலை - வெள்ளி மலையிலே தோன்றும், காசு அறுவனப்பின் ஓர் கன்னி ஏதுவால் - குற்றமற்ற அழகினையுடைய ஓர் மணமாகாத மங்கையின் பொருட்டு, ஆசு அற - பற்றுக்கோடு நீங்குமாற, அச்சுவக்கிரீவன் ஆவியும் - அச்சுவகண்டன் என்னும் பெயரையுடையவன் உயிரையும், தேசறு திகிரியும் - ஆண்மையற்ற அவனுடைய ஆணையுருளையையும், செவ்வன் வௌவும் - நன்றாகக் கைப ்பற்றுவான் (எ - று.) |