அவன் அச்சுவகண்டனைக் கொன்று அரசாட்சியைக்
கைப்பற்றுவான் என்றல்

402. கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் 2கன்னி யேதுவால்
ஆசற வச்சுவக் கிரீவ னாவியும்
3தேசறு திகிரியுஞ் 4செவ்வன் வௌவுமே.
 

     (இ - ள்.) கேசவனார் திறம் கிளப்பின் - அந்த முதல் வாசுதேவனுடைய
தன்மையைச் சொல்லுமிடத்து, அவன் வெண்மலை - வெள்ளி மலையிலே தோன்றும், காசு
அறுவனப்பின் ஓர் கன்னி ஏதுவால் - குற்றமற்ற அழகினையுடைய ஓர் மணமாகாத
மங்கையின் பொருட்டு, ஆசு அற - பற்றுக்கோடு நீங்குமாற, அச்சுவக்கிரீவன் ஆவியும் -
அச்சுவகண்டன் என்னும் பெயரையுடையவன் உயிரையும், தேசறு திகிரியும் -
ஆண்மையற்ற அவனுடைய ஆணையுருளையையும், செவ்வன் வௌவும் - நன்றாகக் கைப
்பற்றுவான் (எ - று.)

( 164 )