(இ - ள்.) போதுசேர் அலங்கலாய் - மலர்கள் பொருந்திய மாலையை யுடையவனே! ஓதநீர் உலகுடை உரிமை - ஒலிக்கின்ற கடலாலே சூழப்பெற்ற உலகத்தைப் பெற்றுள்ள உரிமை, ஆதியும் அந்தமும் நடுவும் நம்மதே என்று - முதலிலும் இறுதியிலும் நடுவிலும் நம்முடையதாகவே அமைந்துள்ளது என்று, காதுவேல் அரசர் கோக் களிப்புற்றான் - கொலை செய்கின்ற வேற்படையை உடைய மன்னர்களின் மன்னனாகிய பரதன் மகிழ்ச்சியை அடைந்தான். இது புராண நீர்மையே - இதுமா புராணத்தில் கூறப்பட்ட வரலாறாகும். அரோ, அசை நிலை (எ - று.) அரசர்கோ என்றது பரத சக்கரவர்த்தியை. அலங்கலாய் என்றது நிமித்திகன், சடியை விளித்தது. புராணம். மாபுராணம் |